பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய பெண் மரணம்-போலீஸ் விசாரணை

பேராவூரணி அருகே சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய பெண் மரணம்-போலீஸ் விசாரணை

செய்தி:

பேரை


பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி.டிரைவர்.இவரது மனைவி கற்பகசுந்தரி.இவர் ஒட்டங்காடு அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இவர்களுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் நிஷாந்தி மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரேஷ்மி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தகராறு

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகறாரு ஏற்பட்டதாக கூறப்படுகிற்து.அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த பொழுது கற்பகசுந்தரி மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இதையடுத்து அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.கற்ப்பகசுந்தரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கற்பகசுந்தரியின் தந்தை செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சாலைமறியல்

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் கற்பகசுந்தரியின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வழக்குப்பதிவு

அப்போது கற்பகசுந்தரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,குடிபோதையில் கணவர் அவரை அடித்துக் கொன்றிருக்கலாம் எனக்கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தர்மேந்ரா,பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக செய்தனர்.

இதற்கிடையே கற்பகசுந்தரியின் உடல்  உடற்கூறாய்வு முடிக்க பட்டு மாலை 7 மணியளவில் ஒட்டங்காடு கொண்டுவரப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடு நடைபெற்றது.

இந்நிலையில் ராமமூர்த்தியை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூல்நிலை நிலவி வருகிறது.


Post a Comment

0 Comments