அறந்தாங்கி மார்க்கத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.
அகலப்பாதையாக மாற்றப்பட்ட பிறகு முதலாவது நேரடி பகல்நேர வாராந்திர விரைவு ரயில் சேவை காரைக்குடி - திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள மக்கள் சென்னை எழும்பூர் செல்ல வசதியாக
திருவாரூர் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மார்க்கத்தில் செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்.
தெனாலி ஓங்கோல் குண்டூர் நெல்லூர் கூடூர் சென்னை எழும்பூர் செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிபுலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி சிவகங்கை மானாமதுரை ராமநாதபுரம் வழியாக இயக்கப்பட உள்ளது.
திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி பாதையில் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் முதலாவது விரைவு ரயில்
24-08-2022 முதல் செகந்திராபாத்தில் இருந்து புதன்கிழமை தோறும் இரவு 7-05 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9-30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து அங்கிருந்து 9-45 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் மாலை 3-15 மணிக்கு வந்து அங்கிருந்து 3-25 மணிக்கு புறப்பட்டு இரவு 11-45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வெள்ளிக்கிழமை காலை 8-50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3-15மணிக்கு திருவாரூர் வந்து அங்கிருந்து 3-25 மணிக்கு புறப்பட்டு இரவு 9-50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து இரவு 10-10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் 12-50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு தொடர் வண்டி சேவைகளை பயன்படுத்தி பயனடைய வேண்டுகிறேன்.
0 Comments