ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

 பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில விரைவு தொடர்வண்டி கள் சேவை மாற்றம் செய்யப்படுகிறது.தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


    திருச்சி கோட்டத்தில் இந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.இதனால் பல ரெயில் வண்டிகள் நேரத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

ஒரு பகுதி ரத்து:

மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி சிறப்பு விரைவு ரயில் சேவை யிில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு,தஞ்சாவூரில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு இயக்கப்படும்.

திருச்சி-மயிலாடுதுறை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு வண்டி தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மாற்றுப்பாதை:

  மதுரை-சென்னை எழும்பூர் இடையே காலை 7.10 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு இரயில்,சென்னை எழும்பூர்-குருவாயுர் இடையே காலை 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வரும் 11,25 தேதிகளில் விழுப்புரம், கடலூர் போர்ட்,விருத்தாச்சலம் என்ற மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.

புறப்படும் நேரம் மாற்றம்:

  மயிலாடுதுறை-திருச்சி இடையே இன்று காலை 8.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் 1 மணி 15 நிமிடங்கள் தாமதமாகவும் ,சென்னை எழும்பூர்-காரைக்குடி இடையே இயக்கப்படும் வரும் 25ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

Post a Comment

0 Comments