கேப்டன் விஜயகாந்த்:ஒரு தொண்டனின் கவிதை

 மண்ணித்துவிடு தலைவா...

மண்டியிட்டு மன்றாடி கேட்கிறேன்...

மண்ணித்துவிடு தலைவா...

Vijayakanth


தலைவா....

நாடும் நாட்டு மக்களும் 

எப்படியோ நாசமாக போகட்டும்...

என நீங்கள் சுயநலமாக இருந்திருந்தால்...

இன்று உங்கள் உடல்நலம் நலமாக இருந்திருக்கும்...


படம் நடித்தோமா...

பணம் சேர்த்தோமா...

ரசிகர் மன்றம் சேர்தோமா...

கூட்டம் கூட்டினோமா...

பாலபிசேகம் பட்டாசு என 

ரசிகனை பயண்படுத்திக்கொண்டோமா...

படம் வெள்ளி விழா கண்டதா...

வெற்றி விழா கொண்டாடினோமா..

கோடி கோடியாய் சம்பளம் வாங்கினோமா...

வெளிநாட்டிலே சொத்து சேர்த்தோமா...

வசதியான வாழ்க்கை வாழ்ந்தோமா...

என்றில்லாமல்...


மக்களைப்பற்றி யோசித்தாய்...

மக்களுக்காக குரல் கொடுத்தாய்..

ஏழைகளுக்கு ஓடோடி உதவினாய்...

இயற்க்கைச் சீற்றங்கள் எங்கு நடந்தாலும் தமிழகத்தில் இருந்த உதவிக்கரம் நீட்டினாய்...

அடித்தட்டு மக்களின் வாழ்வியலை 

மக்களோடு மக்களாக இனைந்து உணர்ந்தாய்...

லஞ்சம்,ஊழல்,சாதி,மதம் என மக்கள் படும் வேதனைகளை பார்த்து சினம் கொண்டாய்...

சினம் கொண்ட உம்மை...சீண்டி விட்டோம் நாங்கள்...

வா...தலைவா...வா...என்றோம்...

வாழ்வை மீட்டு தா...என்றோம்...

எங்களை மலை போல் நம்பினாய் தலைவா...

அரசியல் களம் கண்டாய் தலைவா...

அரசியல் களத்திலே...உண்மை...நேருக்கு நேர்...தைரியம்...வெளிப்படைத்தன்மை...என்ற அத்துனைக்கு நீதான் ஐயா முகவரி...


உன்னை கோபக்காரன் 

என்றார்கள்...அவர்களே...பின்னாளில்

நல்ல குனமானவர் என்றார்கள்...


உளருகிறார் என்றார்கள்...அவர்களே...பின்னாளில்

உள்ளதை உள்ளதென பேசும் உண்மையானவர் என்றார்கள்...


விவேகமில்லாதவர் என்றார்கள்... அவர்களே... பின்னாளில் சிரிப்போ,அழுகையோ, கோபமோ,எதையும் மறைக்கத் தெரியாத வெள்ளந்தி மனிதன் என்றார்கள்...


அவை நாகரீகம் தெரியாதவர் என்றார்கள்...அவர்களே... பின்னாளில் அவரைப்போல துணிச்சல்காரர் யாரும் இல்லை என்றார்கள்.... 


பிழைக்கத் தெரியாத மனிதன் என்றார்கள்...அவர்களே பின்னாளில் உழைக்கத் தெரிந்த கறைபடாத  கரத்துக்கு சொந்தக்காரர் என்றார்கள்...


ஓடி ஓடி உழைத்தாய் கிராமம் கிராமமாக சூறாவளியாய் சுழன்றாய்...துயர் என்று வந்தவருக்கு வாரிக் கொடுத்து வள்ளலானாய்...தொண்டையில் ரத்தம் கசிய கசிய மக்களே...மக்களே என்று மன்றாடினாய்... ஒரு வாய்ப்பு கொடுங்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்று கூறி...என் மக்கள்...என் மக்கள்..என தலையில் வைத்து கொண்டாடினாய்... காசு என்ன பணம் என்ன மக்களே...உங்கள் வீட்டுக்கு நான் வந்தால் ஒரு வேளை சோறு போட மாட்டீர்களா என் மக்களே...என்று மக்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டாய்... 


உடல் நலம் குன்றி ஓய்வில் இருந்த போதும் உன் கொடை வள்ளல் குணம் ஒருபோதும் ஓயவில்லை...புயல் வந்தபோதும் மழை வந்தபோதும் கொரொனா என்ற கொடிய நோய் வந்த போதும் உன் உதவிக்கரம் ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை...கொரொனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் கொடுத்தாயே...அன்றே உன்னை தூற்றியவர்கள் போற்றினார்கள்... உன்னை விட ஒரு தெய்வமில்லை உலகில்...என்று புகழ வைத்தாய்...


ஒருகாலத்தில் உதாசீனப்படுத்திய மக்கள் பின்னாளில் அவர் மட்டும் உடல் நலத்தோடு இருந்திருந்தால் இன்று எப்படி இருக்கும் என்று ஏங்க வைத்தாய்...


அன்று..வா...தலைவா...வா...

அரசியலுக்கு வா...என்று மன்றம் வளர்த்து மன்றாடிய நாங்கள்...நான் உட்பட...மண்டியிடுகிறோம் 

மண்ணித்துவிடு தலைவா...


இறைவா...இப்பொழுதும் வேண்டுகிறோம் இறைவா...


என தலைவன்...

நலம் மட்டுமே போதும்...


நீண்ட ஆயுளோடு என் தலைவன் 

நிம்மதியாக ஓய்வெடுக்க அருள்வாய் 

இறைவா...

இங்கனம்...

என்றும்...என்றும் எங்கள் 

தலைவனின் நலம் வேண்டுகிறேன் ....


....ராஜேந்திரன்....

From fb

Post a Comment

0 Comments