அறந்தாங்கி நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

 தமிழக அரசின் உத்தரவின் படி  அறந்தாங்கியில் இன்று 10-07-2022  ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! 

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை  அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பொது மக்களுக்கு 100%  தடுப்பூசி போட வேண்டும் என்பதை முன்னிட்டு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய  பொதுமக்கள்  நகராட்சி பகுதியில் கீழ்கண்ட  5 இடங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


இடங்கள்:

1) வார்டு எண்-08 TELC-  நடுநிலைப்பள்ளி.


2) வார்டு எண்-10 எல் என் புரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி.


3) நகராட்சி அலுவலகம்- கோட்டை-1


4) மயில் மெட்ரிக் பள்ளி களப்பக்காடு


5)சத்தியமூர்த்தி நினைவு நடுநிலை பள்ளி (ஆவுடையார்கோயில் ரோடு)


எனவே அறந்தாங்கி நகராட்சி எல்லை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள  இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது . 


இங்ஙனம்

ஆணையர் அவர்கள் 

அறந்தாங்கி நகராட்சி

Post a Comment

0 Comments