🦈அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நகராட்சி மீன் அங்காடி செயல்படுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் உள்ளன.
வாரந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்கி செல்வது வழக்கம்.அதேபோல் இன்றும் வழக்கம் போல மீன் அங்காடி செயல்பட்டது.
🔥மாலை நேரத்தில் திடீரென்று அங்காடியில் இருந்து கரும்புகை வருவதை கண்டு அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
🚒இதில் மூன்று கடையில் உள்ள உபகரணங்கள் தீயில் எறிந்து நாசமானது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்காடியின் அருகில் அதிகமான வீடுகள் இருப்பதால் விரைந்து வந்து தீயணைப்புத்துறை தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
0 Comments