How to apply Govt ITI:
2022- ஆம்
ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார்
தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள்
ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான
விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 24.06.2022 முதல் www.skilltraining.tn.gov.in
இணையதளம் மூலமாக விண்ண ப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை
எனவே மாணவர்கள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண்
சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் - வந்து
நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
ஜுலை - 2022
முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில்
சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. பெண்களுக்கு
வயது வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான
கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க
கையேட்டில் (Prospectus) தரப்பட்டுள்ளன.
விண்ண ப்ப கட்டணம்
ரூ.50/- ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம்.
மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி,
சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும்
உதவித் தொகையாக ரூ.750/- வழங்கப்படும். விண்ண ப்பிக்க கடைசி நாள் 20.07.2022
ஆகும்.
மேலும்,
விபரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
அரசு தொழிற்
பயிற்சி நிலையம், புதுக்கோட்டை 04322-221584, 9486311243,
அரசு தொழிற்
பயிற்சி நிலையம், விராலிமலை 9865447581,
உதவி இயக்குநர்,
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், புதுக்கோட்டை, 9443184841
என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு,
இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு
- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், புதுக்கோட்டை.
0 Comments