புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பெருங்காடு கிராமத்தில் அமைத்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோவில் முகப்பில் யாகசாலை அமைத்து சிவாச்சாரியார்கள் மூன்று நாட்களாக கலசத்திற்கு பூஜைகள் செய்து இன்று புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து பின்பு கோபுரத்தின் மேலே உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அந்த நீரை பக்தர்கள் பரவசத்துடன் பெற்றுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.
0 Comments