அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் அருள்மிகு அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் ஸ்ரீ அய்யனார் கோவில் புரவிஎடுப்பு திருவிழா நடைபெற்றது.புரவி எடுப்பு திருவிழாவிற்காக அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் உள்ள வேளாளர் தெரு பகுதியில் செய்யப்பட்ட அய்யனார் குதிரை, காளை,மதலை இது தவிர 16 அடி உயர அய்யனார் குதிரை உள்ளிட்ட சிலைகளை விரதமிருந்த பக்தர்கள் பொதுமக்கள் மேலதாளம் முழங்க ஆரவாரத்துடன் ஊர்வலமாக கூத்தாடிவயல் ஸ்ரீ அய்யனார் கோவிலுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அய்யனார் கோயிலில் உள்ள சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறந்தாங்கி, மூக்குடி,களப்பக்காடு, ரெத்தினக்கோட்டை, குரும்பக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments