மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் சங்கம் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மாட்டு வண்டியுடன் வந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசு உடனடியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் சொர்ணராசு பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி மணல் குவாரி அமைத்து தரப்படும் என்ற உத்தரவாதத்தை கொடுத்தார். பேச்சு வார்த்தைக்கு பின்பு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தின் போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது. 

அறந்தாங்கி ஆவுடையார் கோவில் மணமேல்குடி ஆகிய மூன்று தாலுகாவிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் உள்ளதாக கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments