அறந்தாங்கி வழியாக மேலும் ஒரு இரயில் | Aranthangi available trains | ernakulam to velankanni via aranthangi

அறந்தாங்கி வழியாக மேலும் ஒரு இரயில் 



இரயில் சேவை



எர்ணாகுளம்-வேளாங்கண்ணி புது இரயில் சேவை ஜூன் மாதம் தொடஙக இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி வரும் சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் வகையில் உள்ளது. 

அகல இரயில் சேவை


      13 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இந்த இரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி இருப்பது பயணிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே இருந்த மீட்டர் கேஜ் பாதையில் ஓடிய இந்த இரயில் அகலப்பாதையாக மாற்றி 3 வருடங்களுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது.13 வருடங்களாக நடைபெற்று வந்த அகலப்பாதையாக மாற்றும் பணி கடந்த 2019-ல் முடிவுற்றது.அதன் பிறகு குறைந்த அளவே இரயில்கள் இந்த தடத்தில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த இரயில் சேவையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி


     இச்சேவையானது வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து தொடங்குகிறது.பகல் 12:35க்கு கேரளா எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் இரயில் மறுநாள் மாலை 6:30க்கு வேளாங்கண்ணி வந்து சேரும்.

தற்போது வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த ரயில் சேவை வாரத்தின் சனி ஞாயிறு கிழமைகளில் செயல்படுகிறது.

வண்டி எண் 06035 சனிக்கிழமை 12:35-க்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்து சேருகிறது.

Post a Comment

0 Comments