புதுக்கோட்டை வரலாற்று சிறப்புகள்:
சிறப்புகள்:
புதுக்கோட்டை தனி ரூபாய் நோட்டு மற்றும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயஙகி வந்த கடைசி மாகாணம் ஆகும்.இது பல்வேறு வரலாற்று சான்றுகளையும் சிறப்புகளையும் கொண்டுள்ளது. தஞ்சாவூர்-ன் சில பகுதிகளையும் சேர்த்து இந்த மாகாணம் செயல்பட்டு வந்தது.
நினைவு சின்னங்கள்:
பெருங்கற்கால நினைவு சின்னஙகளும் இங்கு இருக்கிறது.சமணர் படுக்கையும் இருக்கிறது.குடுமியான்மலை மற்றும் சித்தன்னவாசலில் சமணர் படுக்கையில் பழங்கால எழுத்துமுறையான தமிழி,தென்பிராமி கல்வெட்டுகளும் தென்படுகின்றன.
கல்வெட்டு:
பொற்பனைக்கோட்டை 2012-ல் நடைபெற்ற ஆய்வில் கிடைத்த பிராமி கல்வெட்டு மூலம் இது சங்ககால கோட்டை என்று அறியப்பட்டது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் கற்காலத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்ததற்கான தொல்லியல் ஆய்வுக் குறிப்புகளும் கிடைத்துள்ளன.வரலாற்று சிறப்பு மிக்க ஓவியங்களும்,கல்வெட்டுகளும் இன்றளவும் காண முடிகிறது.புதுக்கோட்டையை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர் கட்டிய அரண்மனை இன்றும் பயன்பாட்டில் உள்ளது.மன்னருக்கு சொந்தமான பல கட்டிடங்கள் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மன்னர் காலத்தில் உபயோகப்படுத்திய போர் பயிற்சி உபகரணங்கள் மற்றும் பொருட்கள் புதுக்கோட்டை மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் ஆராய்ச்சி:
இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சியில் போரின் போது இறந்த இருவரின் எலும்புக்கூடு வாளுடன் கிடைக்கப்பெற்ற்து.அஜந்தா ஓவியத்திற்கு அடுத்தபடியான வரலாற்று சிறப்புமிக்க சித்தன்னவாசல் ஓவியம் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.
அணவயல் அரை மாரத்தான் போட்டியில் பங்குபெற மற்றும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
புதுக்கோட்டையை ஒட்டியுள்ள நார்த்தாமலை குடுமியான்மலை மலைக்குன்றுகளை கொண்டுள்ளது.
சுற்றுலாத்தலங்கள்:
- சித்தன்னவாசல்
- குடுமியான்மலை
- மியூசியம்
- அரண்மனை
- பிரஹதாம்பாள் கோவில்
சித்தன்னவாசல்:
புதுக்கோட்டை-யில் இருந்து சரியாக 15 கி.மீ தொலைவில் அன்னவாசல் சாலையில் அமைந்துள்ளது சித்தன்னவாசல். இங்கு 17 சமணர் படுக்கைகள் உள்ளது.சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சித்தன்னவாசல் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
மேலும் சித்தன்னவாசல் புகைப்பட தொகுப்புகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.
குடுமியான்மலை:
புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள குடுமியான்மலை மிகச்சிறந்த சங்ககால கல்வெட்டுகளையும் சமணர் படுக்கைகளையும் கொண்டது.இங்கு 4000 ஆண்டுகள் பழமையான பாறைகள் காணப்படுகின்றன.
தமிழக அரசின் வேளாண்மை ஆராய்ச்சி மையம் இங்கு அமையப்பெற்றுள்ளது.
மேலும் குடுமியான்மலை புகைப்பட தொகுப்புகளை காண இங்கே க்ளிக் செய்யவும்.
பகுதி இரண்டில் மேலும் சில சுற்றுலாத்தளங்களை பற்றி காண்போம்
0 Comments