அறந்தாங்கியில் இலவச நீட் பயிற்சி மையம்
அறந்தாங்கியில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் மையம் ஆரம்பம்,அரசும் உடனே தொடஙக வேண்டும் என கோரிக்கை.
அறந்தாங்கி IMA மற்றும் திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பின் சிகரம் இலவச நீட் பயிற்சி மையம் தொடர்ந்து 5 வருடங்களாக ஏழை எளிய அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக இலவசமாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன.
150 Students
ஆரம்பத்தில 54 மாணவர்களுடன் தொடஙகிய இந்த மையம் தற்போது 150 மாணவர்களாக உயர்ந்துள்ளது.அரசும் தமிழகம் முழுவதும் இலவச நீட் பயிற்சி மையம் நடத்த வேண்டும் என திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பின் தலைவர் Dr.ச.தட்சிணாமூர்த்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
5th Year
ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழாவில் அறந்தாங்கி IMA தலைவர் Dr.லெட்சுமிநாராயணன் தலைமையும்,அறந்தாங்கி IMA செயலாளர் Dr.இப்ராம்ஷா மற்றும் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் தலைவர் Dr.ச.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.அறந்தாங்கி IMA முன்னாள் தலைவர் Dr.கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்பானதொரு ஊக்க உரை நிகழ்த்தினார்.சிகரம் ஆசிரியர் திரு.முருகையன் திட்ட இயக்குனர் திரு.பாஸ்கரன் ஆகியோர் நீட் தேர்விற்கு பயிற்சி பெறுவதற்கான அறிவுரைகளை வழங்கினர்.
பாரதநேசன் N.கணேசன் திசைகள் ஒருங்கிணைப்பாளர் திரு.சர்குருநாதன்,ஆசிரியர் திரு.முத்துராஜா, குளத்துக்குடியிருப்பு திரு.பாலகிருஷ்ணன்,திரு.அன்பு,திரு.பெருமாள் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Thank Message
திசைகள் அமைப்பின் பொருளாளர் திரு.முகமது முபாரக் வரவேற்புரையும் ஆசிரியர் திருமதி.மேகலா நன்றியுரையும் ஆற்றினர்.
0 Comments