ஆவுடையார்கோவில் என வழங்கப்பெறும் திருப்பெருந்துறை அருள்தரு ஸ்ரீ யோகாம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதசுவாமி மற்றும் அருள்திரு ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் திருக்கோயில் ஆனித் திருமஞ்சனப் பெருவிழா -2022 உட்பிரகார சேவை!
ஒன்றாம் நாள் திருவிழா நாளான இன்று 25.06.2022 (ஆனி 11)
சனிக்கிழமை காலை
காலை 5.08 க்கு மேல் 6.00 மணிக்குள் மிதுனம் லக்னத்தில் ராஜஸ வேளையில் உற்சவர் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி கீழிறங்கி சர்வ அலங்காரத்தில் வந்து ஆத்மநாதசுவாமி முன்பாக காப்புக் கட்டிக் கொள்ளுதல் மற்றும் ஏழு நிலைகள் கொண்டு 200அடி உயரத்தில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது ராஜகோபுரத்தில் (மஹத்துவஜாரோஹணம்) கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
0 Comments