கட்டுமாவடி கடல் 300 மீட்டர் உள்வாங்கியது

300 மீட்டர் கடல் உள்வாங்கியது

நாகுடி அடுத்த கட்டுமாவடியில் நேற்று காலை கடல் 300 மீட்டர் உள்வாங்கி காணப்பட்டது.இதனால் சேறும் சகதியுமான தரைப்பகுதி வெளியே தெரிந்தது.மீனவர்களுக்கும் மீன்பிடி படகுகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட வில்லை.

எப்போதும்போல மே மற்றும் ஜூன் மாதங்களில் கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசும்.இந்த இழுவான் காற்று வீசும் பொழுது கடற்கரை ஓரத்தில் உள்ள நீரோட்டம் சற்று அதிகமாக இருக்கும்.அதோடு அமாவசை நாட்களில் இது போன்ற அதிக நீரோட்டம் இருக்கும்.

இந்த மாதத்தில் வீசும் காற்றினால் கரையோரத்தில் உள்ள நீரோட்டம் முழுவதும் ஆழ்கடலுக்கு சென்றுவிடும்.இதன் காரணமாக கடல்நீர் உள்வாங்கி சேறும் சகதியும்,பாசிகளும் வெளியே தெரியும்.

அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுப்புறச் செய்திகளை அறிந்துகொள்ள நம் இணையதள பக்கத்தில் இணைந்திருங்கள்.

இது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் காற்று சுழற்சியில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments