அறந்தாங்கி அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா

அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

பங்கேற்பு:

அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.K.நவாஸ்கனி MP மற்றும் தமிழக சுற்றுச்சூழல்,காலநிலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் MCA அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். 

அமைச்சர் உரை
சுற்றுச்சூழல் அமைச்சர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில்,ஆசிரியர் ஆசிரியை மாணவ மாணவிகளின் நலணை கருத்தில் கொண்டு ரூபாய் 25 லட்சத்தில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றும்,கல்லூரி வளாகம் முழுவதும் ரூபாய் 20 லட்சத்தில் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் கூறினார்.மேலும் முதல்வரின் நிதிநிலை அறிக்கையில் இந்த கல்லூரிக்கு ரூபாய் 1 கோடி ஒதிக்கியுள்ளதாகவும் ,25 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

MP உரை 
MP நவாஸ்கணி அவர்கள் பேசுகையில் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரப்படும் என்று கூறினார்.விழாவில் மாணிக்க வாசகர் வெண்பா மற்றும் திருமுறை கண்ட புராணம் ,கல்லூரி ஆண்டு மலர் ஆகியவை வெளியிடப்பட்டது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம்,பேராசிரியர்கள் மற்றும் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நன்றியுரை

உதவிப்பேராசிரியர் நன்றி கூறினார்.





Post a Comment

0 Comments