வண்டல் மண் அள்ள அனுமதி

இலவசமாக வண்டல் மண் அள்ள அனுமதி


தமிழ்நாடு சிறு கனிம விதி 2(அ)-ன் படி விவசாயிகள் தங்கள் வயல்களின் மண் வளத்தை மேம்படுத்துவதற்காகவும் மண் பாண்டங்கள் செய்வதற்காகவும்,சொந்த வீட்டு உபயோகத்திற்காகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள 1361 கண்மாய் மற்றும் குளங்களில் 93,51,552 கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்,மண்பாண்டம் செய்பவர்கள் மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம்,வீடு கட்டும் பொதுமக்கள் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வணடல் மண் மற்றும் களிமண் எடுத்து பயன்படுத்தலாம்.

நிபந்தனை


வண்டல் மண் எடுத்து பயன்படுத்தும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகில் உள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும்.

அனுமதி பெறுவது எப்படி?


விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அடங்கல் மறும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர் (கனிமம் மறும் சுரங்கம்) பிரிவிற்கு அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர் எக்டருக்கு 185 கனமீட்டர்,புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் எக்டருக்கு 222கனமீட்டர் ,வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர்,மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

கட்டுப்பாடுகள்


வண்டல் மண் எடுக்கும்போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும்.குளத்தின் கரையின் குறுக்கே பாதைகள் அமைக்க கூடாது.1 மீட்ட்ர் ஆழத்திற்கு மேல் மண் அள்ள கூடாது.வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டும் சேமித்து வைக்ககூடாது.மண் எடுக்கும் போது மதகுகள் எந்த விதத்திலும் சேதம் அடையக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Vandi


Post a Comment

0 Comments