கோடை மழை
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணிநெரத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
நாகுடி : அதிகபட்சமாக 7.6செ.மீ மழை பதிவு
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.அதிலும் நாகுடி அதிகபட்சமாக 7.6செ.மீ மழை பதிவாகியது.
காவிரி நீர் கடைமடை பகுதியை வந்தடைந்த இந்த நேரத்தில் பெய்த மழையால் சுற்றுவட்டார பகுதி குளம்,கண்மாய்கள் விரைவில் நிரம்பும். காவிரி நீர் வரத்து மற்றும் மழையால் அதிகமான கோடை வெப்பம் தனிந்து தற்போது சில்லென்ற நிலை காணப்படுகிறது.
0 Comments