எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
கோரிக்கை
பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில் சேவை கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்து நடைமுறைக்கு வந்தது.
தற்போது வாரம் ஒருமுறை இயக்கப்படும் இந்த விரைவு இரயில் அறந்தாங்கி மார்க்கமாக வேளாங்கண்ணிக்கும்,எர்ணாகுளத்திற்கும் செல்கிறது.
சுற்றுலா இரயில்
அறந்தாங்கியில் இருந்து கேரளா மற்றும் வேளாங்கண்ணி சுற்றுலா செல்ல சிறந்த ஒரு இரயில் போக்குவரத்து இதுவாகும்.சுற்றுலாப்பயணிகள் இதை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குற்றாலம் பகுதிக்கு செல்ல சிறந்த போக்குவரத்து. குற்றாலம் செல்பவர்கள் இந்த ரயிலில் செங்கோட்டை சென்று மாறிக்கொள்ளலாம்.செங்கோட்டையில் இருந்து வெறும் 8 கி.மீட்டர் தொலைவில் குற்றாலம்.சபரிமலை செல்பவர்களும் செங்கோட்டையில் இறங்கி மாறிக்கொள்ளலாம்.
விமான நிலையம்
கொச்சி விமான நிலையம் செல்பவர்கள் எர்ணாகுளத்திலும்,திருவனந்தபுரம் விமான நிலையம் செல்பவர்கள் கொல்லம் இரயில் நிலையத்திலும் பயணிகள் இறங்கி கொள்ளலாம்.
அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி
கேரளா முக்கிய சுற்றுலா தளங்களான தென்மலை,கொல்லம் கடற்கரை,ஜடாயு பாறை,படகுசவாரி செல்பவர்களுக்கு தனித்தனியே தென்மலை மற்றும் கொல்லம் இரயில் நிலையங்களில் இந்த வண்டி நின்று செல்லும்.
ஆழப்புழா,குமரகேம் படகுசவாரி,வாகமான் மலை மற்றும் மூணாறு சுற்றுலாத் தலங்கள் செல்ல ஏற்றவாறு கோட்டயம் ஜங்சனிலும் வண்டி நின்று செல்கிறது.
ஆழப்புழா மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி களை காண எர்ணாகுளம் ஜங்சன் என கேரளாவின் முக்கிய சுற்றுலா தளங்களை காண வழிவகை செய்யும் நோக்கில் இந்த இரயில் சேவை மறுபடியும் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல கேரளா மக்கள் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தளமான வேளாங்கண்ணி பகுதிகளை பார்வையிட வசதியாகவும் இந்த இரயில் சேவை உள்ளது.
சுற்றுலா அட்டவணை
அறந்தாங்கியில் இருந்து நேரடியாக கேரளா செல்ல இந்த இரயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக அறியப்படுகிறது. தொடர்ந்து அறந்தாங்கி மார்க்கமாக அதிக இரயில்கள் இயக்கினால் இரயில் பயணர்கள் பயனடைவார்கள்.
1 Comments
Very useful
ReplyDelete