ஆத்தாளூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவில் பெருந்திருவிழா
இந்த ஆண்டு கோவில் திருவிழாக்கள் அனைத்தும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.வைகாசி விசாக திருவிழாக்கள் முடிந்து தற்போது ஆனி திருவிழா அம்மன் கோவில் திருவிழாக்கள் தொடங்க இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும் பேராவூரணி அடுத்த ஆத்தளூர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் பெருந்திருவிழா இந்த ஆண்டும் பூச்சொறிதலுடல் சிறப்பாக தொடங்க இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் ஆத்தாளூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகளியம்மன் கோவில் திருவிழா வருகின்ற ஆனி 21 ம் நாள் (5-7-2022) செவ்வாய் கிழமை காப்புகட்டுதலுடன் தொடங்கி ஆனி 31 அன்று விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
காப்பு கட்டுதலுக்கு ஒரு வாரம் முன்பு பூச்சொறிதல் உற்சவத்துடன் திருவிழா களைகட்ட இருக்கிறது.
திருவிழா உற்சவ விபரம்:
- ஆனி 14 - செவ்வாய் - பூச்சொறிதல்
- ஆனி 17 - வெள்ளி - பாலி விதை போடுதல்,முகூர்த்தக்கால் நடுதல்
- ஆனி 21 - செவ்வாய் - பாலி கொட்டுதல்,காப்பு கட்டுதல்
- ஆனி 29 - புதன் - மது எடுத்தல்,தேரோட்டம்
- ஆனி 30 - வியாழன் - தீர்த்தம்,காப்பு களைதல்
- ஆனி 31 - வெள்ளி - விடையாற்றி உற்சவம்
0 Comments