அறந்தாங்கி-சென்னை இடையே விரைவு பேருந்து சேவை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-சென்னை இடையே படுக்கை வசதி கொண்ட விரைவு பேருந்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவுப்பேருந்து
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது புதுக்கோட்டை மாவட்டம்.அறந்தாங்கியில் இருந்து சென்னை சென்று வர இரண்டு மார்க்கமும் விரைவு பேருந்து (SETC)இயக்க வழிவகை செய்யுமாறு அறந்தாங்கி மக்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர்.
MP கோரிக்கை
ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ்கனி MP அவர்கள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே TNSTC பேருந்துகளை இயக்கி வருகிறது.மேலும் படுக்கை வதிகள் கொண்ட விரைவு பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
வழித்தடம்
விரைவுப்பேருந்து அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்லவும்,சென்னையில் இருந்து அறந்தாங்கி என இரு வழி பேருந்தாக இயக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 Comments