புதுக்கோட்டை-மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் பதவியேற்பு

புதுக்கோட்டை-மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் பதவியேற்பு

பணிமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்த சாமி.சத்தியமூர்த்தி தஞ்சாவூர் மகாராஜா சரசுவதி மகால் நூலகத்திற்கு நிர்வாக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த எஸ்.மணிவண்ணன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக எஸ்.மணிவண்ணன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்பு

தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாகியாக இடம் மாறுதல் பெற்ற சாமி.சத்தியமூர்த்தி அவர்களும்,புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி ஏற்றுக்கொண்ட எஸ்.மணிவண்ணன் அவர்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்.இந்நிகழ்வின்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர்,மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர், பள்ளித்துணை ஆய்வாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடன் இருந்தனர்.
வாழ்த்து

புதிதாக பதவியேற்றுக்கொண்ட இரு அலுவலக அதிகாரிகளுக்கும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள்,தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments