சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு விடியற்காலையில் வெள்ளம் வடிந்தது.
புதுக்கோட்டையின் கடற்கரை பகுதிகளில் அதிகமான சூரைக்காற்றுடன் மழை பெய்தது.கோடை வெப்பம் தாழ முடியாமல் இருந்த பகுதிகள் தற்போது சற்று குறைந்து உஷ்ணத்தில் இருந்து விடுபட்டிருக்கிறது.
வளிமண்டல சுழற்சி
நேற்று இரவு முதல் இடி,மின்னல் மற்றும் சூரைக்காற்றுடன் பெய்த மழை விடியற்காலை வரை தொடர்ந்தது.வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்திருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
விடிய விடிய கொட்டிய மழையில் அனல் காற்று குறைந்து சற்று மிதனான காற்று வீசுகிறது.
0 Comments