இலவச கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

அறந்தாங்கி கூடைப்பந்து ஆட்டக்கழகம் (ABBC)மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்தாட்டக் கழகம் இணைந்து நடத்திய 17 -வது ஆண்டு இலவச கூடைப்பந்தாட்ட பயிற்சி சிறப்பான முறையில் நேற்று 12-6-2022 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
Basket ball



நடைபெற்ற இடம்


மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவு அறந்தாங்கி அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தலைமை


தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் அளித்தார்.கடந்த 30 நாட்களாக நடைபெற்று வந்த கூடைப்பந்தாட்ட பயிற்சி நிறைவடைந்ததையொட்டி பயிற்சி பெற்ற மாணவர்கள் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
Basket2



கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கிய பயிற்சி முகாமில் 100-க்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெற்று பயிற்சி பெற்றனர்.
சான்றிதழ் வழங்கி பேசிய விளையாட்டு துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மாணவர்களின் நலன் குறித்து பேசினார்.மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதால் உடல் ஆரோக்கியமாவதோடு தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படுகிறது எனும் கூறினார்.

வசதிகள்

B3


அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்படி இருக்கைகள் அமைத்து தரப்படும் என்று தெரிவித்தார்.விழாவில் அறந்தாங்கி நகர்மன்றத்தலைவர்,ஒன்றியக்குழுத
 தலைவர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

Post a Comment

0 Comments