முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை வருகை: mk stalin

ரூபாய் 600 கோடியில் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிப் பணிகள் 

தமிழக முதல்வர் இன்று புதுக்கோட்டை வருகை வருகிறார்.ரூபாய் 600 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வளர்ச்சிப் பணிகளை துவங்கி வைக்க உள்ளார்.தமிழக முதல்வராக பதவியேற்று முதல் முறையாக புதுக்கோட்டைக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நலத்திட்ட உதவிகளையும் வழஙகுகிறார்.
புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்குபெற்று ரூபாய் 81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

1397 புதிய திட்டப்பணிகளுக்கு (ரூபாய் 143.05 கோடி மதிப்பில்) அடிக்கல் நாட்டியும்,379.30 கோடி மதிப்பீட்டில் பயணாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்.

அரசு விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்,மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,சட்டப்பேரவை உறுப்பினர், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர்,அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர்,மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையிலான அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 1500 போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

இன்று காலை சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிற்பகல் 1.30 மணியளவில் புதுக்கோட்டை வருகிறார்.மதிய ஓய்வுக்குப் பிறகு மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.அங்கிருந்து விமானம் மூலம் இரவு 8.30-க்கு சென்னை செல்கிறார்.

எஸ்.ரகுபதி மற்றும் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க வினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments