அறந்தாங்கி-க்கு புதிய பேருந்து நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் அறந்தாங்கிக்கு புதிய பேருந்து அமைத்து தர வேண்டி கோரிக்கை வைத்தார்கள்.
8-6-2022 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதுக்கோட்டை வருகை தந்தார்.அப்போது நன்றியுரை கூறிய மாண்புமிகு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கூறியதாவது
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் அறந்தாங்கி.சுமார் 50000-க்கும் மேற்பட்ட மக்களதொகை கொண்ட நகரம்.மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளதாக கூறினார்.
அறந்தாங்கியில் தற்போது மறைந்த முதல்வர் டாக்டர் கலைஞர் பெயரில் பேருந்து நிலையம் உள்ளது.அது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.தற்போது இருக்கும் பேருந்து நிலையத்திற்கு அருகே தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான இடம் வாரச்சந்தையாக செயல்பட்டு வருகிறது.அதை இரண்டாக பிரித்து சீர்மிகு சந்தையாகவும்,நவீன பேருந்து நிலையமும் அமைத்துதர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
0 Comments