புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, சந்தைப்பேட்டை அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க இருக்கிறது.
இன்று காலை 10 மணிக்கு காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் ஆலங்குடி அருகே கல்லூரி கட்டுவதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.எனினும் இவ்வாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்:
- பிஎ-தமிழ்
- பிகம்-வணிகவியல் (ஆங்கிலவழி)
- பிஎஸ்சி -இயற்பியல் ( ஆங்கிலவழி)
- பிஎஸ்சி-கணிதம் (ஆங்கிலவழி)
- பிஎஸ்சி-கணினிஅறிவியல்( ஆங்கிலவழி)
என ஐந்து பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்....
0 Comments