புதுக்கோட்டை மாவட்ட புத்தக திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை வாசிக்கிறது:
புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.07. 2022 வியாழக்கிழமை காலை 11 . 30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு அலுவலர்கள்,தலைமையாசிரியர்கள்,கல்லூரி முதல்வர்கள்,அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments