மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற புதுக்கோட்டை மாணவி

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநில பாடப் புத்தகத்தில் இடம் பெற்ற புதுக்கோட்டை மாணவி



புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி.
தற்போது கல்லூரி ஒன்றில் பிஏ படித்து வரும் இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +1 படித்தபோது அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று நாசாவின் விண்வெளி நிலையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் பயணச் செலவு மாணவியே ஏற்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்திருந்தது.

 இது குறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் இவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.மேலும் அதற்கான முழுத்தொகையை கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் வழங்க முன் வந்தது அப்போது தனக்கு தேவையான உதவி கிடைத்து விட்டது என்ற கூறிய மாணவி வேறு ஏதாவது உதவி தேவை எனில் கேளுங்கள் என்றது.

மாணவியோ எங்கள் ஊர் மக்களுக்கு கழிப்பறை வசதி அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.அதனை ஏற்ற அந்த நிறுவனம் அந்த கிராமத்திற்கு 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்திருந்தது.தனக்கு உதவி செய்ய வந்தவர்களிடம் ஊர் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறிய மாணவியை பலரும் பாராட்டினர்.

மாணவியின் செயல்பாடுகள் குறித்து மகாராஷ்டிராவில் உள்ள பாடப்புத்தகத்தில் ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் நாலாம் பக்கத்தில் ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.இதனை சிவா என்பவர் எழுதியுள்ளார்.இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டச் சேர்ந்த மாணவியின் சமூக அக்கறை வெளி மாநிலத்தில் பாடமாக அமைந்திருப்பது வரவேற்பு பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments