ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி கலை,இலக்கியம்,விளையாட்டு,கல்வி,மருத்துவம்,சமூக சேவை,அறிவியல் மற்றும் பொறியியல்,பொதுச்சேவை,வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி அவர்கள் மகத்தான சாதனை படைத்தவர்கள் ஆகியோருக்கு அவர்களது சேவையை பாராட்டி பத்ம விபூஷன் பத்ம பூஷன் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கலை ,இலக்கியம் ,கல்வி, விளையாட்டு மருத்துவம் ,சமூக சேவை ,அறிவியல் மற்றும் பொறியியல் ,பொதுச்சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயலாற்றி அவர்கள் மகத்தான சாதனை படைத்தவர்கள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் ,பத்மஸ்ரீ விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04322 222270 மூலம் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 8/7/2022 க்குள் மாவட்ட சமூக நல அலுவலகம் வந்து சேரவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு (இந்திய ஆட்சிப் பணி) அவர்கள் அறிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் புதுக்கோட்டை
0 Comments