தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான அரசாணையை காண இந்த க்ளிக் செய்யவும்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு இன்று ஜூலை 4 2022 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்,நகராட்சி பள்ளிகள்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2022-23 கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து திருத்திய வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இடம் இருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேராடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றிதழுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மெற்சொன்னவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பெறும் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி 04-07-2022 முதல் 06-07-2022 மாலை 5 மணி வரை
0 Comments