'கல்லூரி கனவு' திட்டம் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும்: - Dr.ச.தெட்சிணாமூர்த்தி வேண்டுகோள்

 கல்லூரி கனவு திட்டம் 

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளாய் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு நடத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி IMA மற்றும் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து "அடுத்து என்ன படிக்கலாம்" என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வை 2-07-22 அன்று அறந்தாங்கியில் நடத்தினார்கள்.
'கல்லூரி கனவு' திட்டம் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும்:  - Dr.ச.தெட்சிணாமூர்த்தி வேண்டுகோள்



கல்லூரி கனவு" திட்டம் தொடங்கி இருக்கும் அரசிற்கு, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் "கல்லூரி கனவு "திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உட்பட அது சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் விழாவில் வைத்தார்கள்.

  அறந்தாங்கி இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் நடைபெற்ற இந்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திய மருத்துவக் கழக அறந்தாங்கி கிளை தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணன் தலைமையில் திசைகள் பொருளாளர் முகமது முபாரக், ஒருங்கிணைப்பாளர்கள் சற்குருநாதன்,ஆண்டோ பிரவீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
திசைகள் மாணவர் அமைப்பு தலைவர் Dr.தட்சிணாமூர்த்தி துவக்க உரையாற்றினார்.
திசைகள் அமைப்பு


மருத்துவம் மற்றும் துணை மருத்துவ படிப்புகள் குறித்து அரசு மருத்துவர் அசாருதீன், பொறியியல் கல்வி குறித்து பொறியாளர் அக்ஷயா, கலை மற்றும் அறிவியல் கல்வி குறித்து பேராசிரியர் விஸ்வநாதன், சட்ட கல்வி வழிமுறைகள் பற்றி வழக்கறிஞர் லோகநாதன், பிசியோதெரபி இயற்கை மற்றும் உடல் மருத்துவ கல்வி குறித்து மருத்துவர் காமராஜ், மொழிக்கல்வி குறித்து பேராவூரணி கல்லூரி பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, தெழிற்கல்வி குறித்து கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரி நிறுவனர் அப்துல் பாரி, பொது வேலை வாய்ப்புகள் குறித்து பொறியாளர்  கஃபார்கான், ஆசிரியர் கல்வி பணி குறித்து கீதாஞ்சலி மஞ்சன் ஆகியோர்  மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு உரையாற்றினார்கள். மேற்படிப்பு குறித்த மாணவ மாணவியர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.


திசைகள் மாணவர் வழிகாட்டி

திசைகள் அமைப்பு அறந்தாங்கி


Post a Comment

0 Comments